குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு... தென்காசி மாவட்ட மழை நிலவரம் இதோ.!

தென்காசி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கனமழைக்கான orange அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது

இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரவு முழுவதும் கனமழை பெய்து வந்தது

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 6 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் விடுமுறை அறிவித்துள்ளார்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது

Stories

More

தண்ணீரால் சூழ்ந்த  கிராமம்...!

சென்னை அருகே இப்படி ஒரு இடமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

இதனை தொடர்ந்து மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தற்போது குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளிக்க அதிக அளவில் வருகை தரும் நிலையில், குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

ஊமை நாடகம் மூலம் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்.!