நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஏன் முத்தங்கி அலங்காரம்... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.!

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோட்டை பகுதியில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது

இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார்

தினசரி கட்டளைதாரர்கள் மூலம் காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 9 மணிக்கு 1,008 வடைமாலை சார்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது

பின்னர் நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

கனகாபிஷேகத்துடன் அபிஷேகம் நிறைவு பெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு புதிய முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது

Stories

More

நிதி சிக்கல்கள் தீர கற்பூரத்தை வைத்து இதை செய்யுங்க..!

2024ல் இந்த 3 ராசியினருக்கு அமோகம்

லட்சுமி தேவியின் அருள் கிடைக்கனுமா?

பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

ஏர்கலப்பை உடன் காணப்படும் துர்க்கை அம்மன் கண்டெடுப்பு.!