யாகத்தில் மிளகாய் போட்டு வேண்டினால் நினைத்தது நடக்கும்... மதுரை பிரத்தியங்கரா தேவி கோவிலின் அதிசயம்.!

Scribbled Underline

மனித உடலும் சிம்ம முகமும் கொண்ட பிரத்தியங்கரா தேவி தீயவை எல்லாம் அழித்து நன்மையை தரக்கூடிய சக்தி படைத்தவளாக திகழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்

பிரித்திங்கரா தேவி இடம் வேண்டிக் கொண்டால் நினைத்தவை எல்லாம் நடக்கும் என்று சொல்லப்படுகின்றது. இத்தெய்வத்திற்கு என்று தனியாக கோவில்கள் குறைந்த அளவில் தான் தமிழ்நாட்டின் உள்ளது

இந்த நிலையில் மதுரை யானைமலை பகுதியில் குன்றின் மேல் முருகன் கோவில் உள்ளது. இந்த முருகன் கோவிலில் மிகவும் சக்தி வாய்ந்த பிரத்தியங்கரா தேவி ஆலயமும் உள்ளது. எத்தனையோ ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் அமாவாசை நாளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்

இங்கு உள்ள பிரத்தியங்கரா தேவியை நினைத்து அமாவாசை திருநாளில் பக்தர்கள் அனைவரும் காய்ந்த மிளகாய்களை வாங்கிக் கொண்டும் சிறிய பேப்பரில் தனது குறைகளை எழுதி அங்கு நடக்கும் யாகத்தில் போட்டு பூஜை மேற்கொள்வார்கள்

இதுபோன்று செய்யும் பொழுது பிரத்தியங்கரா தேவி குறைகளை தீர்த்து நன்மை தருவாள் என்று சொல்லப்படுகின்றது

ரயில் பாதைகளில் ஜல்லிக் கற்கள் ஏன் உள்ளன.?

2024-ல் நடக்கப் போவதை 100 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பத்திரிக்கை!

பல ஆண்டுகளாக குறையும் நிலாவின் சுற்றளவு… பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?

More Stories.

இதனால் இந்நாளில் மட்டும் மக்கள் அனைவரும் இக்கோவிலுக்கு வந்து தனது குறைகளை பிரித்தியங்கிராதேவி இடம் கொடுத்துவிட்டு செல்வார்களாம்

இதுபோக நீண்ட நாட்களாக நோயில் இருக்கக் கூடியவர்கள் வேலை கிடைக்காதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் கிடைக்காதவர்கள், என அனைவரின் குறைகளையும் இந்த யாகத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்

ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்.!