தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் பூமாலை வணிக வளாகம் மற்றும் தஞ்சை தாரகை செயல்பட்டு வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரிரு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்க
மாதம் தோறும் முதல் திங்கள் கிழமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது
இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 5-ம் தேதி நடந்த கண்காட்சியில் சிறுதானியத்தால் ஆன சிற்றுண்டிகள் மற்றும் ஆர்கானிக் முறையில் தயாரான சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி உள்ளிட்ட உணவுப் பொருட்கள்,
இயற்கை முறையில் தயாரான அழகு சாதனப் பொருட்கள், பூஜை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றன