கோடை காலத்தில் அதிக அளவில் விற்பனையாகும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான தேங்காய்பூ.!
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களை தவிர்க்க தேங்காய் பூக்கள் விற்பனைக்கு அதிகமாக வந்துள்ளன
பொதுவாக தென்னை, பனை மரங்களின் அனைத்து பொருட்களுமே உடலுக்கு நன்மை தரக் கூடியவை. ஆனால் இவைகளின் பயன்கள் பொதுமக்களுக்கு புரிவதில்லை
தற்போது ஒரு சில மாவட்டங்களில் பனை பூ, குருத்து மற்றும் தேங்காய் பூ, குருத்து விற்பனை செய்கின்றனர்
கேரளாவில் மட்டும் விற்பனையாகி வந்த தேங்காய் பூக்கள், பொள்ளாச்சி, சென்னை, திருச்சி, நாமக்கல், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் விற்க ஆரம்பித்துள்ளனர்
அதுபோல் விழுப்புரத்திலும் ரங்கநாதன் சாலை, மந்தக்கரை, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன் பகுதியில் விற்பனை செய்கின்றனர்
பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும். தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்படுத்தலாம்
தேங்காய்ப் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறையஉதவுகிறது
ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த மருத்துவமாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது
தேங்காய்ப்பூவில் முக்கியமாக முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடெட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது
சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய்ப் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரகத் தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது
நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம். மேலும் தேங்காய் பூ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தேங்காய் பூ 50, 80, 100,120 ரூபாய் போன்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது
தற்போது கோடைகாலம் என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் தேங்காய் பூவை வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என வியாபாரி கூறினார்