உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்
அதன்படி, நிகழாண்டு விழா ஏப்ரல் ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில்,தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி அலங்காரம் மற்றும் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது
அதன்படி எட்டாம் நாள் விழாவில் காலையில் சந்திரசேகர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலையில் சந்திர பிரபையில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது
கோயில் திருச்சுற்றில் வளம் வந்ததை அடுத்து சந்திரசேகர் சுவாமிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவுற்று தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும் சாமி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அதே சமயம் பள்ளி மாணவனின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இசைக்கலைஞர்கள் நேரலையில் வாசித்து பாடிய தெய்வீக பாடலுக்கேற்ப மாணவிகள் பரதம் ஆடி அசத்தினர்
பரத நிகழ்ச்சியை கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏப்.20-ம் தேதி காலை 7 மணிக்கு நான்கு ராஜவீதிகளில் தேரோட்டமும், ஏப்ரல் இருபத்து மூன்றாம் தேதி சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளன
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றன