சுருளி அருவிக்கு போறீங்களா... அப்போ இந்த புதிய அப்டேட் பற்றி தெரிஞ்சிக்கோங்க.!
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது
சுற்றுலாத்தலமாகவும், ஆன்மீக தலமாகவும் அமைந்துள்ள இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்
இந்நிலையில் சித்திரை மாதம் துவங்கியது முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் குவியத் தொடங்கினர்
பக்தர்கள் அருவியில் புனித நீராடி பூத நாராயண சுவாமி வேலப்பர் கோவில் மற்றும் கன்னிமார் கோவில்களில் விசேஷ பூஜைகளில் கலந்து கொண்டனர்
மேலும் சித்திரை மாதங்களில் தேனி மாவட்டத்தில் வீரபாண்டி மாரியம்மன் கோவில் திருவிழா, கம்பம் மாரியம்மன் கோவில் மற்றும்
மதுரை அழகர்கோவில் திருவிழாக்களுக்கு பக்தர்கள் அருவியில் புனித நீராடி தங்களது விரதத்தை தொடங்கி புனித நீரினை எடுத்துச் சென்றனர்
திருவிழாவை முன்னிட்டு அதிகப்படியான சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து துறையினரும், பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் அதிகப்படியாக ஈடுபட்டு வருகின்றனர்