60 வயதாகியும் கோவை சரளா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்.!

தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்கள் மட்டுமே நகைச்சுவையில் கோலோச்சிய காலத்தில் பெண்களும் நகைச்சுவையில் பின்னி பெடலெடுப்போம் என்று நிரூபித்தவர் நடிகை மனோரம்மா

அவருக்கு பிறகு அந்த இடத்தை யார் நிரப்பப்போகிறார் என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் நிலவி வந்த நிலையில், அந்த இடத்தில் கச்சிதமாக பொருந்தினார் நடிகை கோவை சரளா

கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய போது சத்தமே இல்லாமல் என்ட்ரி கொடுத்து சரவெடியாய் தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தார் கோவை சரளா

விவேக், வடிவேலு, கவுண்டமணி செந்திலுடன் இவரின் காமெடி காம்போ இன்றும் மக்கள் தன்னை மறந்து சிரிக்கும் காமெடியாக இருந்து வருகிறது

இதுவரை மொத்தம் 900 படங்களில் நடித்துள்ள கோவை சரளா கதாநாயகியாக 15 படத்தில் நடித்துள்ளார்

எம்ஜியாரின் தீவிர ரசிகையான கோவை சரளா, அவரை பார்த்து தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாக பேட்டி ஒன்றில் அவரே கூறியிருக்கிறார்

இன்று வரை தமிழ் சினிமாவில் தனது காமெடியால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகை கோவை சரளாவுக்கு வயது 60 க்கும் மேல் ஆகிவிட்டது

இன்று வரை அவர் திருமணம்  செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது

மேலும் அவர் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. தற்போது கோவை சரளா அந்த வதந்திகளுக்கு தனது பதிலால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

திருமணம் செய்துகொள்ளாதது குறித்து அவர் கூறுகையில், ‘பிறக்கும் போது நாம் தனியாகத்தான் பிறக்கிறோம், அதே போல் இறக்கும் போதும் தனியாகத்தான் இறக்கிறோம்

இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்று எனக்கு தோன்றியது, சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்

மேலும் அவர் கூறுகையில், திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றுக்கொண்ட பல பெற்றோர்கள் இன்று அந்த குழந்தைகள் கைவிட்டதால் தனியாக தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்

எனக்கு யாரையும் சார்ந்து வாழ பிடிக்கவில்லை என்று ஏன் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை போட்டு உடைத்துள்ளார் கோவை சரளா

next

எப்போது கல்யாணம்.? KPY பாலா சொன்ன பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்.!