பல வருஷத்துக்கு பிறகு குடும்பத்துடன் தளபதி விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா.!

1990-களில் அதிக பிரபலமாக இருந்த நடிகைகளில் ரம்பாவும் ஒருவர்

1993-ல் வெளியான பிரபு நடித்த 'உழவன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்

ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் காதலா காதலா, விஜய்யுடன் என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்

கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்

திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகிவிட்ட இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்

சமீப காலமாக சின்னத்திரை ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார்

இந்நிலையில், விஜய்யை தனது குடும்பத்தினருடன் ரம்பா சந்தித்துள்ளார்

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

இந்த சந்திப்பின்போது புதிய ஹேர்ஸ்டைலில் விஜய் காணப்பட்டார்

அவர் தனது அடுத்த படத்திற்கு தயாராகுவதற்கு இந்த கெட்டப்புக்கு மாறியதாக கூறப்படுகிறது

இதற்கிடையே விஜய்யின் 69 ஆவது படத்தில் ரம்பா இணைந்திருப்பதகாவும், அதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்தாகவும் இணையத்தில் தகவல் பரவியுள்ளது

next

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள்.!