ஏன்தான் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்தேனோ...  வருத்தப்பட்ட மஞ்சிமா மோகன்.!

நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் 'தேவராட்டம்' என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்

பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மஞ்சிமா மோகன் கவுதம் கார்த்திக்கை திருமணம் செய்ததற்காக வருத்தப்படுவதாக கூறினார். அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார்

திருமணத்திற்கு முன்னரே மஞ்சிமா மோகன் சிறிது உடல் பருமனாக காணப்பட்டார். திருமணத்திற்கு பிறகு அவரது உடல் எடை மேலும் அதிகரித்துள்ளது

அது குறித்து அவரது பேட்டியில், “என்னுடைய உடல் எடையை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்

எனது உடல் எடை அதிகரித்து இருப்பதை பார்த்து சிலர் நான் கர்ப்பமாக இருக்கிறேனா என கேட்டு வருகின்றனர்

இதனை கேட்டு சில சமயங்களில் நான் அழுது இருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்

மேலும், “சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்வதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் வருத்தப்படுவார்கள்

கவுதம் கார்த்திக்கும் இதனால் மிகவும் கவலைப்படுவார்

என்னால் அவரும் பாதிக்கப்படும்போது நான் ஏன் அவரை திருமணம் செய்து கொண்டேன் என வருத்தப்படுவேன்.” எனக் கூறியுள்ளார்

தொடர்ந்து, “ஆனால் என் கணவர் ஒருபோதும் அதை என்னிடம் காட்டிக்கொண்டதில்லை. எனது கணவர் எனக்கு மிகவும் பக்கபலமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறார்

அதனால் எந்த கமெண்ட்களும் என்னை இப்போது பாதிப்பதில்லை.” என அந்த பேட்டியில் பேசியுள்ளார்

next

பல வருஷத்துக்கு பிறகு குடும்பத்துடன் தளபதி விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா.!