இந்தியாவின் நம்பர் 1 பணக்கார நடிகை யார் தெரியுமா.?

தமிழில் நிறைய படங்கள் நடிச்சிருக்காங்க...

நடிகைகளுக்கு இருக்கும் சொத்து மதிப்பை அறிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் காணப்படும்

இதேபோன்று நடிகைகளும் தங்களது சொத்து மதிப்பை அதிகப்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்

இதற்காக அவர்கள் சினிமாவில் நடிப்பதுடன், விளம்பர படங்களில் இடம் பெறுவது, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவற்றை செய்கின்றனர்

சினிமா துறையில் நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நடிகைகளின் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கும்

அந்த வகையில் இந்தியாவிலேயே மிகவும் பணக்கார நடிகை யார்? என்று கேட்டால் அதற்கு விடை நடிகை ஐஸ்வர்யா ராய் என்பது தான்

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரை துறையில் முக்கிய நடிகையாக இடம்பெற்று வரும் ஐஸ்வர்யா ராய் சுமார் 862 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்

இதற்காக அவர் சுமார் 15 கோடி ரூபாய் சம்பளம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது

இந்தப் படத்திற்கு முன்னதாக ஐஸ்வர்யா ராய் 2.0, ராவணன், குரு, ஜீன்ஸ், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்

இதற்கு அடுத்த இடத்தில், சுமார் 650 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பிரியங்கா சோப்ரா உள்ளார்

பாலிவுட் நடிகை ஆலியா பட் மூன்றாவது இடத்தில் உள்ளனர்

நயன்தாராவின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

next

நயன்தாரா இளமையாக இருக்க இதுதான் காரணமாம்… அவரே பகிர்ந்த டயட் சீக்ரெட்.!