அந்த மனசு தான் சார் கடவுள்... மனநலம் குன்றிய மாணவர்களை அருவியில் குளிக்க உதவிய போலீசார்.!

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தற்போது சீசன் களைகட்டி காணப்படும் நிலையில் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வருகிறது

இந்த சீசன் காலகட்டத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வார முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது

இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து மனநலம் குன்றிய மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்

பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காரணமாக மாணவர்கள் திணறினர்

அவர்களை காவல்துறையினர் அருவியில் பத்திரமாக அழைத்துச் சென்று குளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்

அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த அவர்களுக்கு, தேனீர் உள்ளிட்ட சிற்றுண்டிகளை காவல்துறையினர் வழங்கினர்

இந்த சம்பவம் அங்கிருந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது

next

தொப்பை கொழுப்பை விரைவாக கரைக்கும் 5 பானங்கள்.!