தேநீர் பிரியர்களின் நாள் சூடான டீ குடிப்பதில் தான் தொடங்குகிறது
டீ குடிக்காமல் இருந்தால் பலர் புத்துணர்ச்சி இல்லாதது போல் உணருவார்கள்
ஆனால் ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்று அடுத்தடுத்த ஸ்லைடில் தெரிந்து கொள்வோம்
தேநீரில் காஃபின் இருப்பதால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் உயர் ரத்த அழுத்த பிரச்சனை கட்டுக்குள் வரும்
உடலில் அதிக அளவு காஃபின் இருப்பதால் தூக்கமின்மை பிரச்சனை உண்டாகும்.
எனவே டீ குடிப்பதை நிறுத்தினால் நன்றாக உறக்கம் வரும்.
டீ குடிப்பதை நிறுத்தினால் பற்களின் வெண்மை பாதுகாக்கப்படும்.
தேநீரில் உள்ள சர்க்கரை உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது
தேநீர் அருந்துவதை நிறுத்தினால் உடல் எடை குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்