'எதிர்நீச்சல்' நடிகர் மாரிமுத்து காலமானார்.!

'எதிர்நீச்சல்' நடிகர் மாரிமுத்து காலமானார்.!

திரைப்பட நடிகரும், இயக்குநருமான 57 வயதாகும் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார் 

'எதிர்நீச்சல்' சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறபடுகிறது

உடனே அருகிலிருந்த நடிகர் கமலேஷ் உள்ளிட்டோர் அவரை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரிமுத்துவின் உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்

இவர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்

மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சினிமாவில் இருந்து சமீபத்தில் சின்னத்திரைக்கு வந்தார்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது

இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார்

மதுரை தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. குறிப்பாக ஏமா ஏய் என்று இவர் கூறும் வசனம் மீம் ஆக மாறியது

சின்னத்திரை ரசிகர்கள் எதிர்நீச்சல் தொடரை விரும்பி பார்ப்பதற்கு நடிகர் மாரிமுத்துவும் ஒரு காரணம்

ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள்.!