உயிரிழந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து உயிரிழந்து 7 நிமிடங்களுக்கு பின்னர் பழைய நிலைமைக்கு திரும்பிய நடிகர் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த ஷிவ் கிரேவால் என்பவர் சுமார் 7 நிமிட மரணத்திற்கு பின்னர் உயிர் பிழைத்துள்ளார். பின்னர் அவர் அளித்துள்ள பேட்டி கவனம் பெற்று வருகிறது
மரணத்திற்குப் பிறகு, உயிர் உடலில் இருந்து முற்றிலும் பிரிந்தது போன்ற உணர்வை அவர் விவரித்தார்
அவர் ஒரு வெற்றிடத்தில் இருப்பதைப் போல உணர்ந்ததாக கூறினார்
விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வுகளும் நினைவுகளும் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.
நமக்கு மறுபிறவி அல்லது வேறு வாழ்க்கை இருக்கலாம். இதயம் நின்ற பிறகு, எல்லாம் முடிந்துவிட்டதாக அவர் நினைத்ததாக குறிப்பிட்டார்
இதய துடிப்பு மீண்டு வந்த பின்னர் ஷிவ் சுமார் 1 மாதமாக கோமா நிலையில் இருந்தார். இதைத் தொடர்ந்து இதயத்தின் தமனி பகுதியில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.