ஹோட்டல் ஸ்டைல்  சாம்பார்வைக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க

தேவையான பொருள்கள்

மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் மிளகு - 25 கிராம் வெந்தயம் - 25 கிராம்

செய்முறை

முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.

1

கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

2

இதனை கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.

3

வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்.

4

இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.

5

இந்த சாம்பார் பொடியை காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.

6

சாம்பார் வைக்கும்போது ஒவ்வொரு மசாலாப் பொடியையும் தனித்தனியாக சேர்த்து சாம்பார் வைப்போம். இதனால் மசாலா பொடிகளின் அளவை சரியான அளவில் சேர்க்காவிட்டால் சாம்பார் சுவையாக வராது. ஆனால் சாம்பார் பொடியை தயார் செய்து வைத்து வைத்துவிட்டால், சாம்பார் வைக்கும் போது எளிதாக இந்த மசாலாவை சேர்த்து கொள்ளலாம்.இப்படி வைக்கும் சம்பார் அப்படியே ஹோட்டல் சுவையில் இருக்கும்.

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும்  8 பக்க விளைவுகள்.!