குற்றாலத்தில் சாரல் மழையுடன் குளியல் போடும் சுற்றுலா பயணிகள்.!

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் பொதுவாக மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் குற்றால சீசன் தொடங்கும்

இந்த ஆண்டு ஜூலை மாதம் குற்றால சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதத்தில் குற்றால சீசன் களைகட்டி உள்ளது

கடந்த சில நாட்களாக தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது குற்றாலத்தில் மிதமான அளவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது

இந்நிலையில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவது குற்றால அருவிகளில் நீர்வரத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தற்போதைய சீசனில் சென்னை, கேரளா என பிற பகுதியைச் சார்ந்த மக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்

வந்தாச்சு தீபாவளி.. புதுபுது மாடலில் கலர் கலரா பட்டாசுகள்.. என்னென்ன தெரியுமா.?