கோவை மக்களுக்கு புதிய ஆணையர் கொடுத்த உறுதி என்ன தெரியுமா.?

கோவை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பிரதாப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வந்த சிவகுரு பிரபாகரன் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

தனது 4வது முயற்சியில் தேர்ச்சி பெற்ற சிவகுரு பிரபாகரன் தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் பயிற்சி முடித்து நெல்லை மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றினார்

தொடர்ந்து சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வந்த நிலையில் அவர் கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கோவை மாநகராட்சி அலுவலகம் வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு மாநகராட்சியின் புதிய ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்

இதனைத் தொடர்ந்து சிவகுரு பிரபாகரன் கூறுகையில், சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள், மாநகராட்சி பணிகளின் போது பல்வேறு அதிகாரிகளும் தனக்கு எப்படி பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும்,

Stories

More

கோவை மக்களுக்கு புதிய செல்ஃபி பாயிண்ட்..!

மலைப்பாதைல வண்டி ஓட்டுனா இந்த தப்ப பண்ணாதீங்க

குன்னூரில் ஃபேமஸான சுற்றுலா தளத்திற்கு ஒரு விசிட்!

கோவை மக்கள் எந்த நேரத்திலும் தன்னை அழைக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், பொதுமக்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதோடு, தன்னார்வலர்களோடு இணைந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்

கோவையில் இப்படி ஒரு அறிவியல் பார்க் இருக்கா.?