திருமணமான நடிகைகளை தென்னிந்திய சினிமா ஓரம்கட்டுகிறது

காஜல் அகர்வால் குற்றச்சாட்டு

விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால்

தமிழில் பரத் நடித்த பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர், ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் தமிழ் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு சினிமாவுக்கு நகர்ந்தார் காஜல்

அங்கு ராம்சரனுடன் மகதீரா படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும் மற்ற மொழிகளிலும் இந்த படம் டப் செய்யப்பட்டது

மகதீரா படத்திற்கு பிறகு காஜல் அகர்வாலின் ரேஞ்சே மாறியது, அடுத்தடுத்த படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவின் டாப் நடிகையாக மாறினார்

காஜல் அகர்வாலுக்கு மவுசு கூடவே தமிழில் நடிகர் விஜயுடன் துப்பாக்கி படத்தில் நடித்தார். அந்த படமும் சூப்பர் ஹிட், இதை தொடர்ந்து ஜில்லா படத்திலும் விஜய்க்கு ஜோடி போட்டார் காஜல்

தமிழ் சினிமாவிலும் காஜலுக்கான மவுசு அதிகரிக்கவே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து வந்தார் காஜல்

2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மும்பை தொழிலதிபரை காதலித்து கரம்பிடித்தார் காஜல், தற்போது இந்த ஜோடிக்கு நீல் என்ற மகனும் உள்ளார். குழந்தை பெற்ற பிறகும் முழுவீச்சில் நடிப்பில் கலக்கி வருகிறார் காஜல்

தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ள காஜல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘திருமணம் ஆகிவிட்டால் தென்னிந்திய சினிமா நடிகைகளை ஒதுக்குகிறது’என்று குற்றம்சாட்டியுள்ளார்

இது குறித்து அவர் கூறுகையில், “தென்னிந்திய சினிமாவுக்கும், பாலிவுட் சினிமாவுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. அங்கு ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்தாலும் கூட அவர்களுக்கு தொடர்ந்து கதாநாயகிகளாக நல்ல கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது

ஆனால், தென்னிந்திய சினிமாவில் அப்படி இல்லை, திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை

இந்த விஷயத்தில் நயன்தாரா விதிவிலக்கு அவரது கதை தேர்வு, படங்களின் தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். திருமணமான நடிகைகளை தென்னிந்திய சினிமா ஓரம்கட்டுகிறது

இந்த நிலையை விரைவில் மாற்றுவோம், நடிகைகள் பலரும் திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் கூட உற்சாகத்துடன் நடிக்க வருகின்றனர், ரசிகர்களின் பார்வையும் மாறியுள்ளது

நல்ல கதை உள்ள படத்தில் யார் நடித்தாலும் அதை ரசித்து பார்க்கின்றனர் ரசிகர்கள்” என்று காஜல் அகர்வால் மனம் திறந்துள்ளார்

next

பிரபல நடிகர் சந்தானத்தின் மனைவி யார் தெரியுமா.?