திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடை.!

Scribbled Underline

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது

பஞ்சுமிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவுபகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது

மேலும் இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 3 ( 1 ) ( ZX ) பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii)&(xi) மற்றும் பிரிவு 26(1)(2)(I)(ii)&(v)யின் படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பாற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இன் படி Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடல், இறக்குமதி செய்தல்,

விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வு ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்

1000 கார்கள் திருட்டு.. போலி நீதிபதியாக வாழ்க்கை.. யார் இவர்?

கல்யாண புடவை ரூ.17 கோடி.. நெக்லஸ் ரூ.25கோடி.. காஸ்ட்லி திருமணம்

விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?

More Stories.

மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்விஜய லலிதா அம்பிகை உத்தரவு பிறப்பித்தார்

மேலும்  தமிழக அரசின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் அரசால்தடை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய் தயாரிப்பு விற்பனை மீண்டும் மீண்டும் செய்தால் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்