மத்திய அரசின் விருதுக்கு தேர்வான‌ தஞ்சாவூர் அய்யன் குளத்தின் அழகிய புகைப்படங்கள்.!

தஞ்சை மேல வீதியிலுள்ள அய்யன் குளம் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 7 ஆயிரத்து 630 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குளத்துக்கு பெரிய கோயில் அருகிலுள்ள குளத்திலிருந்து நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டது

இதற்காக சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டது. காலப்போக்கில் பராமரிப்பின்மை காரணமாக நீர் வரத்து இன்றி மிக மோசமான நிலையில் இருந்த இக்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது

இதில், குளம் தூர் வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, இருக்கை வசதி,அலங்கார மின்விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதில் முக்கியமாக நடைபாதையோரம் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியப் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன

இந்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட விருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2022ம் ஆண்டு நடத்தியது

இப்போட்டி சுற்றுச்சூழல், கலாசாரம், பொருளாதாரம், ஆளுமை, வணிக மாதிரி, தூய்மை உள்பட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில், கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன

இதில் பாரம்பரியக் கட்டமைப்பைப் புதுப்பித்தல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துதல் பணிக்காக அகமதாபாத் நகரமும், ஹெரிடேஜ் வாக் திட்டத்தின் கீழ் போபால் நகர் சதர்மன்சில் வளாகத்துக்கு

அருகில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மீட்டெடுத்தலுக்காகவும், குளங்கள் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரத்தை பேணி காத்தல் பிரிவில் தஞ்சாவூர் அய்யன் குளமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இதற்கான விருது மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூர் நகரில் செப்டம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதை ஜனாதிபதி வழங்க உள்ளார்

பிரம்மிக்க வைக்கும் மேட்டூர் அணையின் வரலாறு.!