மதுரை திருப்பரங்குன்றம் தேரோட்டம்... கம்பீரமாக ரெடியாகும் தேர்.!

கோவில் நகரம் என்று சொல்லக்கூடிய மதுரை மாநகரில் சித்திரை திருவிழா என்பது பெயர்போனது

அதற்கு அடுத்தபடியாக பங்குனி மாதத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும். இந்த திருவிழாவும் ஒவ்வொரு ஆண்டும் வெகு உணர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வருகின்ற மார்ச் 27ஆம் தேதி பட்டாபிஷேகமும், 28ஆம் தேதி திருக்கல்யாணமும் மற்றும் 29ஆம் தேதி திருத்தேரோட்டம் நிகழ்வானதும் நடைபெற இருக்கின்றது

திருவிழாவின் ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில், திருப்பரங்குன்றம் திருத்தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது

இனி வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு டாட்டா.. ரயில்வேயில் அதிரடி மாற்றங்கள்!

வாழ்நாளில் ஒருமுறை கூட தூங்காத உயிரினம் எது தெரியுமா..

நாய்கள் அதிகம் எதை விரும்புகிறது தெரியுமா?

More Stories.

ஒவ்வொரு ஆண்டும் திருத்தேரோட்டம் அன்று இத்திருதேர் திருப்பரங்குன்றத்தை சுற்றி வலம் வரும். மற்ற நாட்களில் ஒரே பகுதியில் நிறுத்தி வைக்கப்படும்

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரை சுத்தம் செய்யும் பணியும், பாலிஷ் அடிக்கும் பணியும், சக்கரங்கள் மாற்றப்படும் பணியும் நடைபெற்றது

தற்போது தேர் கட்டும் பணி அதாவது துணிகள் மற்றும் பூக்களை கொண்டு திரை அழகுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது