இதில் இருக்கும் டேப் வார்ம் என்று கூறப்படும் நாடா புழுக்கள் மூளையில் தொற்றை ஏற்படுத்தலாம். மூளையை பாதிக்கக்கூடிய இந்த காய்கறிகளை கவனமாக வாங்க வேண்டும் மற்றும் மிகவும் கவனமாக சுத்தம் செய்து சமைக்க வேண்டும்.
நீல நிறத்தில், பச்சை நிறத்தில், வெள்ளை நிறத்தில் என்று பல நிறங்களில் காலிஃப்ளவறுக்குள் புழுக்கள் இருக்கும் . இது போன்ற கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் , சமைத்த பிறகும் உயிருடன் இருக்கும். இதை சாப்பிடும் பொழுது அவை சென்று மூளையில் வளரத் துவங்கும். தசைகள், கல்லீரல் மற்றும் மூளையை பாதித்து உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
புழு இருக்கும் கத்தரிக்காயை அப்படியே தூக்கி போட்டு விடுங்கள். கத்திரியில் இருக்கும் புழு நேரடியாக மூளைக்கு செல்லும்! புழு இருக்கும் பகுதியை மட்டும் வெட்டிவிட்டு மீதமுள்ள பகுதியை சமைக்கிறேன் என்பதை தவிர்க்க வேண்டும்.
குடைமிளகாயில் இருக்கும் ஆபத்து புழுக்கள் இருப்பது மட்டுமல்ல. சரியாக சமைக்காமல் அல்லது அப்படியே வெட்டி சாப்பிட்டால், புழுக்கள் இருந்தால் ரத்தத்தில் கலந்து, நம் உடலிலேயே வளரத் தொடங்கும்.
சேப்பங்கிழங்கு இலைகளை பாலக் கீரை போல சமைக்கலாம், பக்கோடா செய்யலாம்; மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் மேற்கூறிய காய்களில் இருப்பது போல இதிலும் புழுக்கள் இருக்கும் ஆபத்து இருக்கிறது எனவே கவனமாக சமைக்க வேண்டும்.
பொதுவாக கோவைக்காயில் புழுக்கள் வராது. அரிதாகவே, புழு இருக்கும் போது அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.