தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் பள்ளியின் இரண்டு மதில் சுவரில் விஜயநகர பேரரசு காலத்தின் ராமாயண இதிகாசங்களை ஓவியங்களாக வரையப்பட்டு வருகின்றன
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திற்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதாலும் அரசு சுவர்களில் பாரம்பரிய மற்றும் மன்னர்களின் வாழ்க்கை முறை குறித்த ஓவியங்கள் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அதன்படி இந்த ஓவியங்களை கும்பகோணத்தை சேர்ந்த ஓவியர் ரமேஷ் குழுவினர் கடந்த ஒரு வாரங்களாக விஜயநகர காலத்தின் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்
பல்லவர், பாண்டியர், சோழர் கால ஓவியங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அமைப்பைக் கொண்டவை விசயநகர நாயக்கர் ஓவியங்கள் ஆகும்
விஜயநகர பேரரசு கால ஓவியத்தின் சிறப்பு என்னவென்றால் விரல்கள், அவர்கள் உடுத்திருக்கும் கிரீடம் உள்ளிட்ட சில அணிகலன்கள் நீளமாகவும், கண்கள் முட்டை வடிவிலும் இருக்கும்
முக்கியமாக இந்த ஓவியத்தில் ஆடை அணிகலன்கள், விரல் அசைவுகள், பாவனைகள் மற்ற ஓவியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்