தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஈபிஎஃப் திட்டம் 1952, ஓய்வூதிய திட்டம் 1995 மற்றும் ஊழியர்கள் வைப்பு தொகை இணைப்பு காப்பீடு திட்டம்
சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்கள் ஓய்வுகால திட்டமாக மட்டுமில்லாமல், அவசர தேவைகளுக்கான திட்டமாகவும் ஈபிஎஃப் இருக்கிறது.
ஊழியர்கள் வைப்பு தொகை இணைப்பு காப்பீடு திட்டத்தின்படி, ரூ. 7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் பயன்பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஆயுள் காப்பீடு திட்டம் கிடைக்கும்.
இதற்கு என்று தனியாக எந்த தொகையும் செலுத்த தேவையில்லை. ஊழியர்களில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பிஃப் தொகையுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பணி செய்யும் ஊழியரின் மரணத்திற்கு பிறகு அவரின் காப்பீடு தொகை அவரின் நாமினிக்கு வழங்கப்படுகிறது.
இந்த தொகையை பெற ஊழியர் அவரின் ஈபிஎஃப் கணக்குடன் நாமினி பெயரை இணைக்க வேண்டும்.
இறந்த ஊழியரின் இறப்பு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கின் காசோலை மூலம் இந்த தொகையை நாமினி பெற்றுகொள்ளலாம்.