சுற்றுலா பயணிகள் இங்கே வர வேண்டாம் - வனத்துறை அதிகாரிகள்.!

சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த அருவியில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து அருவியில் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்

கடந்த வருடங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கால் காட்சியளித்த சுருளி அருவி தற்பொழுது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், அருவியின் நீர் பிடிப்பு பகுதியான தூவானம் அணை, ஈத்தக்காடு

அரிசி பாறை உள்ளிட்ட வன பகுதிகளில் மழைப்பொழிவு இன்றி முற்றிலும் அருவிக்கு நீர்வரத்து இன்றி வெறும் பாறையாக காட்சியளிக்கின்றது சுருளி அருவி

தற்பொழுது கோடை காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் சுருளி அருவிக்கு விடுமுறையை கொண்டாட ஆர்வத்துடன் வரும்

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

சுற்றுலா பயணிகள் தண்ணீர் வரத்து இல்லாததால் அருவியில் குளிக்க நீர்வரத்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்

அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக நின்று விட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வர வேண்டாம் என கம்பம் கிழக்கு வனத்துறை சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது