இசையென்பது பழந்தமிழர் வாழ்வோடு ஒன்றிய ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. அதனால் தான் பிறப்பு முதல் இறப்பு வரை நம்மோடு ஒன்றி இருந்த இசையை இயல், இசை, நாடகம் என முத்தமிழில் ஒன்றாக வைத்துள்ளனர் பழந்தமிழ் மக்கள்
விருதுநகரில் நடைபெற்று வரும் இரண்டாவது புத்தக திருவிழாவில், பொதுமக்களை கவர பழந்தமிழர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன
தற்கால இசை கருவிகளில் இருந்து வேறுபட்டு காணப்படும் இந்த கருவிகளை தேடி சேகரித்துள்ள ஈரோட்டை சேர்ந்த சவுண்ட் மணி என்ற இளைஞர் இசை கருவிகள் பற்றி விளக்கினார்
வயல் வெளிகளில் வேலை செய்யும் போது, காடுகளில் ஆடு மாடுகளை மேய்க்கும் போது என ஒவ்வொரு வேலையிலும் பழந்தமிழர்கள் வேலை களைப்பு தெரியாமல் இருக்க இசைக்கருவிகளை இசைக்கும் பழக்கத்தை வைத்திருந்தனர் என்பதை அங்கிருந்த இசைக்கருவிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது
பெயருக்கு ஏற்ப இந்த இசை கருவியை நாட்களிலும், கதையாடல்களிலும் இடி சத்ததை உண்டாக்க இந்த கருவியை பயன்படுத்தி உள்ளனர்
தற்காலத்தில் செய்யப்படும் ஹீலிங் தெரபிக்கு முன்னோடி இந்த கருவி தான். கிண்ணம் போல இருக்கும் இந்த கருவி கும்பகோணம் பகுதியை சேர்த்தது
இது போல கயம்பா, துத்தேரி, கொக்கரை போன்ற நூறுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவை அனைத்துமே பழந்தமிழர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள்