வந்தாச்சு தீபாவளி.. புதுபுது மாடலில் கலர் கலரா பட்டாசுகள்.. என்னென்ன தெரியுமா.?

ஒவ்வொரு ஆண்டும் வரும் தீபாவளிக்கு ஆண்டு முழுவதும் உழைத்து வரும் சிவகாசியில் ஆடி 18 க்கு பின்னர் பட்டாசு விற்பனை தொடங்கிவிடும். தற்போது தீபாவளிக்கு ஒரு சில மாதங்களே பாக்கி உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களை கவர புதுப்புது ரக பட்டாசுகள் சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்

அந்த வகையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ள பட்டாசுகள் குறித்து சிவகாசி J10 பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் குமாரிடம் கேட்ட போது இந்தாண்டு நிறைய வானவெடிகள் மற்றும் குழந்தைகளை கவரும் வெடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்

கேக் பாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பட்டாசு ஒரே நேரத்தில் வளைவாக சென்று வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இது வரை சினிமாக்களில் வரும் தீப்பொறி காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த ரகம் தற்போது தீபாவளிக்கு வந்து இறங்கியுள்ளது

ஐபிஎல், உலக கோப்பை போன்ற விளையாட்டு போட்டிகளின் போது மைதானத்தில் வானவேடிக்கை காட்ட பயன்படுத்தபட்ட இந்த பட்டாசுகள் சிறிது மாற்றம் செய்யப்பட்டு தரையில் வைத்து வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன

இது போன்று மற்ற சில வானவெடிகளும் புதியதாக வந்துள்ள நிலையில் குழந்தைகளை கவரும் வகையில் அவென்சர்ஸ், பார்பி டால் என இந்தாண்டு அதிக அளவில் பட்டாசுகள் வந்துள்ளன

மேலும் இளைஞர்களை கவரும் வகையில் கம்பி மத்தாப்புகளையே இதய வடிவில் தயார் செய்துள்ளனர்

இது போக குழந்தைகளை கவரும் வகையில் நட்சத்திர வடிவம் மற்றும் 1,2,3 என எண் வடிவங்களில் கம்பி மத்தாப்புகள் இந்த தீபாவளிக்கு புதியதாக வந்துள்ளன

சங்கரன்கோவிலில் வருடத்தில் 6 நாட்கள் மட்டுமே நடக்கும் அதிசயம்.!