கிருஷ்ண ஜெயந்தி... சங்கரன்கோவிலில் கிருஷ்ணர் வேடமிட்டு வந்த க்யூட் குட்டீஸ்.!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும்

அதன்படி இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவில் குட்டி கிருஷ்ணன், ராதை என தெருவே விழாக்கோலம் கொண்டது

கிருஷ்ண பரமாத்மாவின் அவதார தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் திருக்கோவிலுக்கு 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்திருந்தனர்

திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட சப்பரத்துடன் குட்டி கிருஷ்ணர்களும் ராதைகளும் அணிவகுத்து சென்றனர்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவிலுக்கு ராதை, கிருஷ்ணன் வேடம் அணிந்து வரும் குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது

மேலும் குழந்தைகள் பாடல், கதை மற்றும் நடனம் ஆடியும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்

3 நிமிடத்தில் வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்து அசத்தும் நீலகிரி இளைஞர்.!