பிரதமர் மோடி திருப்பூர் வருகை... பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய ரோபோ.!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் ரோபோ மூலம் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

ரோபோ நோட்டீஸ் வழங்கியதை சிறுவர்கள் மட்டுமல்லாது கல்லூரி மாணவர்களும் உற்சாகத்துடன் கண்டுக்களித்தனர்

மேலும் ரோபோவிடம் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

1000 கார்கள் திருட்டு.. போலி நீதிபதியாக வாழ்க்கை.. யார் இவர்?

கல்யாண புடவை ரூ.17 கோடி.. நெக்லஸ் ரூ.25கோடி.. காஸ்ட்லி திருமணம்

விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?

More Stories.