மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது... என்னென்ன ஏற்பாடுகள்.?

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து அய்யப்பனை தரிசிக்க சபரிமலை செல்வது வழக்கம்

நடப்பாண்டில் கார்த்திகை மாதம் இன்று தொடங்கிய நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்பட்டது

ஐயப்பன் சந்நிதியில் நேற்று மாலை தீபம் ஏற்றிய பின்னர், ஆழி குண்டத்தில் நெருப்பு ஏற்றப்பட்டது. அதன்பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக் காலம் தொடங்கியது. 3.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்

இன்று முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு திருவிதாங்கூர் மன்னர் காணிக்கையாக வழங்கிய 420 சவரன் தங்க அங்கி அணிவிக்கப்படுவதும் வழக்கம்

41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு அத்தாழ பூஜைக்குப் பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்

பின்னர் டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது

Stories

More

கந்த சஷ்டி விரதம் எடுப்பது எவ்வாறு..?

மாலை வேளையில் மனதை லேசாக்கும் திருச்சி மாநகராட்சி பூங்கா..

நிரம்பி வழியும் தேனி சண்முக நதி அணை...!

ஜனவரி 20ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். ஐயப்பனை தரிசனம் செய்ய sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு கட்டாயம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது

முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க, நிலக்கல் மற்றும் பம்பையில் முன்பதிவு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பம்பையில் கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

பம்பைக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிலக்கல் பகுதியில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட் டேக் கட்டாயம் எனவும் கேரள காவல்துறை தெரிவித்துள்ளது

சஷ்டி விரதத்தால் இவ்வளவு நன்மைகளா.!