மனிதனின் வாழ்க்கையில் அன்றாட தேவைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக உப்பு விளங்குகிறது
இந்த கல் உப்பு தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் வேதாரணியத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய பகுதியாக மரக்காணம் விளங்குகிறது
ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களில் வழக்கத்திற்கு மாறாக உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும்
ஏனென்றால் மழைக்காலத்தில் உப்பு உற்பத்தி செய்வதில் சிரமங்கள் உள்ளது. இதனால் உப்பு விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்
ஆனால் இந்த நான்கு மாதங்களில் கடுமையான வெயில் இருப்பதால் உப்பு உற்பத்தியும் அதிகரித்து காணப்படும்
அது மட்டுமல்லாமல் இந்த கோடை நாட்களில் உப்பு அதிகம் உற்பத்தி செய்வதால் உப்பு விவசாயத்தை நம்பி உள்ள தொழிலாளிகளும், அதிக லாபம் பெற்று மகிழ்ச்சியாக இருப்பர்
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை அருகே சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைந்துள்ளது
இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிபுரிந்து உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர்
கடந்த ஆண்டாய் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
ஆனால் அந்த மஞ்சள் அலர்ட்டும் உப்பு உற்பத்தி செய்வதற்கு உதவியாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி தாண்டி கடுமையான அனல் காற்று மற்றும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது
வழக்கத்திற்கு மாறாக சுமார் 400 டன் உப்பு, நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்
கன்னியாகுமரியில் ஒரு நாளில் சுற்றிப்பார்க்க டாப் 5 சூப்பர் இடங்கள்.!