மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி.!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தது

எனவே 26.04.2024 முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திலுள்ள சூழல் சுற்றுலாப்பகுதியான

மணிமுத்தாறு அருவிப்பகுதியில் டிசம்பர் 2023-ம் மாதத்தில் பெய்த கனமழையால் பொது மக்கள் நின்று குளிக்கக்கூடிய இடங்கள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்தது

பொது மக்கள் நலன்கருதி மணிமுத்தாறு அருவிப்பகுதியில் குளிப்பதற்கு தடைவிதிக்கபட்டிருந்த நிலையில், தற்போது ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

மணிமுத்தாறு அருவிப்பகுதியில் பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகின்ற 26.04.2024 முதல் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில்

குளிப்பதற்கு காலை 8 மணி முதல் மதியம் 3 வரை வனவிதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது