தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு.!

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சிறந்து விளங்கும் மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.30 லட்சம் விகிதமும், நகராட்சியை பொறுத்தமட்டில் முதல் இடம் பிடிக்கும் நகராட்சிக்கு ரூ.30 லட்சம்,

2வது இடம் பிடிக்கும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3ஆம் இடம் பிடிக்கும் நகராட்சிக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும்

பேரூராட்சியை பொறுத்தமட்டில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் விகிதம்வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இதே போன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மண்டலங்களுக்கு தலா ரூ.30 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் விகிதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்காக 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது

அந்த வகையில், தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி முதலிடத்தையும், தாம்பரம் மாநகராட்சி 2 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது

முட்டை மாஸ்… புதுக்கோட்டையின் ஃபேமஸ் ஃபுட் இதுதான்.!