திருச்சியில் குடும்பத்துடன் குட்டி ட்ரிப் போக சரியான ஸ்பாட்.!

கோடைக்காலம் தொடங்கிய நிலையில் மோர், சர்பத், பழச்சாறு வகைகள், இளநீர், வெள்ளரி போன்றவைகளை உடல் சூட்டை தணிப்பதற்காக மக்கள் அதிகளவில் உட்கொள்கின்றனர்

மேலும், உடலை உட்புறமிருந்து குளிர்விப்பதற்காக குளிர்ச்சி தரும் பானங்களை எடுத்துக்கொள்வது போல் உடலை வெளியில் குளிர்விப்பதற்காக வெயிலுக்கு இதமான இடங்களைத் தேடி மக்கள் செல்கின்றனர்

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களில் கோடைக்காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே கோடை வெப்பத்தைச் சமாளிப்பதற்கான வழிகளை மக்கள் தேடுகின்றனர்

அதனால் ஆங்காங்கு நீச்சல் குளங்களும், நீரில் விளையாடும் வகையிலான பல அமைப்புகளும் செயற்கையாக அமைக்கப்பட்டு வருகின்றன

ஆனால் திருச்சி மக்கள் தங்களை குளிர்வித்துக் கொள்வதற்காகவும், கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தப்பி குடும்பத்துடன் குதுகலிக்கும் வகையில் குட்டி ட்ரிப் செல்வதற்காக வாய்ப்பு அவர்களுக்கு எளிதாக உள்ளது

இயற்கையின் கொடையான ஆறுகள், நீரூற்றுகள், நீரோடைகளை மக்கள் நாடிச்செல்லும் நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான இடங்களில் நீர் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது

ஆனால் கரிகாலன் கட்டிய கல்லணையில் நீரின் அளவு குறைந்து இருந்தாலும் மக்களின் வருகை குறைவதே இல்லை

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

ஏனென்றால் அங்கு கோடை காலத்திற்காக சேமிக்கப்படும் நீரானது அவ்வப்போது திறந்துவிடப்படுகிறது. அதோடு கல்லணையில் கசியும் நீரானது பலரும் குதித்து விளையாடும் அளவிற்கு அதிகமாகவே வருகிறது

அதுமட்டுமின்றி அணையின் ஓரத்தில் உள்ள வாய்க்காலில் வரும் நீரானது செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர் விளையாட்டுகளுக்கு நிகராக இருப்பதால் மக்கள் இங்கு குவிந்து ஆனந்தமாக குதுகலித்து வருகின்றனர்