சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ரத்து.!

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இதற்கிடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற 18-ஆம் தேதி நெல்லை சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது

அதேபோல் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் சென்னையிலிருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்

கன்னியாகுமாரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்படும்

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதுகை எக்ஸ்பிரஸ் ரயில்,

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியன செங்கல்பட்டு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்

வருகின்ற 14ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக டெல்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம் பெரம்பூர் வழியாக மாற்ற பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

next

நீங்களும் பென்ஷன் பெறலாம்… அரசு ஊழியராக இருக்க வேண்டாம்.. எப்படி தெரியுமா.?