மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள வரதாச்சாரியாா் நகர பூங்காவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-இன்கீழ் மேம்பாட்டு பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது
இந்த வரதாச்சாரியாா் பூங்காவில் நடைபயிற்சியாளா்களுக்கு தேவையான நடைமேடை, இளைஞா்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், அனைத்து வயதினருக்கான யோகா மையம்,
குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆம்பிதியேட்டா் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் ரூ.49 லட்சத்தில் இந்த பூங்கா மேம்படுத்தப்பட்டு வருகிறது
இதை பற்றி பொதுமக்கள் கூறும்போது புதிய பேருந்து நிலைய அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பூங்கா வருவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும்,
மயிலாடுதுறையில் இந்த வரதாச்சாரியாா் பூங்கா அனைவராலும் பேசப்படும் பூங்காவாக மேம்படுத்தப்பட்டு வருவது நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தனர்
குறிப்பாக இந்த பூங்காவில் தேசிய தலைவர்கள் சிலை அமைத்து மேம்படுத்த படுவது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது